For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான #Gold பறிமுதல்!

12:17 PM Aug 26, 2024 IST | Web Editor
கோவை விமான நிலையத்தில் ரூ 1 கோடி மதிப்பிலான  gold பறிமுதல்
Advertisement

சார்ஜாவிலிருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

சார்ஜாவில் இருந்து கோவை வரும் ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி
வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்
கோவை விமான நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள்,
பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் தங்கம் பிடிபடாத நிலையில், விமானத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது விமான இருக்கை ஒன்றின் பக்கவாட்டில் இருக்கும் உட்பக்க பேனலில் மூன்று பாக்கெட்டுகளில் தங்கக் கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. தங்கத்திற்கு பயணிகள் யாரும் உரிமை கோராத நிலையில், அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 1399 கிராம் 24 காரட் சுத்தமான தங்க கட்டிகளின் மதிப்பு ரூ.1.02 கோடி எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags :
Advertisement