For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

'நாவலாசிரியர்களின் கதைகள் திருப்தி அளிக்கவில்லை" - கௌதம் மேனனுக்கு பட்டுக்கோட்டை பிரபாகரன் கண்டனம்!

02:21 PM Mar 21, 2024 IST | Web Editor
 நாவலாசிரியர்களின் கதைகள் திருப்தி அளிக்கவில்லை    கௌதம் மேனனுக்கு   பட்டுக்கோட்டை பிரபாகரன் கண்டனம்
Advertisement

'நாவலாசிரியர்களின் கதைகள் திருப்தி படுத்தவில்லை' என்று கூறியது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் இயக்குநர் கௌதம் மேனனுக்கு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisement

'மின்னலே' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கெளதம் வாசுதேவ் மேனன்.  காக்க காக்க,  விண்ணைத் தாண்டி வருவாயா,  வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல ஹட் திரைப்படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு கெளதம் மேனன் இயக்கி சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு'  திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.  இந்நிலையில்,  தனியார் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு கௌதம் மேனன் பேட்டி அளித்தார்.

இதையும் படியுங்கள் : அதிமுக வேட்பாளர் பட்டியல் – ஜெயலலிதா பாணியில் புதியவர்களை அதிகளவில் களமிறக்கிய இபிஎஸ்!

இதில் தனது சினிமா பயணம் தொடங்கிய காலம் முதல் பல்வேறு அனுபவங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.  குறிப்பாக,  ஏன் பிரபல நாவலாசிரியர்களின் கதைகளைப் படமாக்குவதில்லை என்பதற்கு பிரபல கதாசிரியர்களை அணுகியதாகவும்,  அவர்கள் தந்த முதல் வடிவம் தன்னை திருப்திப் படுத்துவில்லை என்றும் அதனால், தானே எழுதத் துவங்கினேன் என்று தெரிவித்தார்.  இது தொடர்பாக எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இந்த கடித்தில் அவர் தெரிவித்ததாவது :

"தங்கள் திரைப்படங்களின் திரை மொழியில் உள்ள தனித்துவத்தையும்,  காதலைக் காதலித்து காதலுடன் காட்சிப்படுத்தும் நேர்த்தியையும் ரசிப்பவன் நான்.
சமீபத்தில் யூ டியூப் சேனல் பேட்டி ஒன்றில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில்..

நான் பல பிரபல கதாசிரியர்களை அணுகியுள்ளேன்.  அவர்கள் தந்த முதல் வடிவம் என்னைத் திருப்தி படுத்தாததால்.  நானே எழுதத் துவங்கினேன் என்று பதில் சொல்லியிருக்கிறீர்கள்.  அந்தக் காதாசிரியர்களின் பட்டியலில் என் பெயரையும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.  இது தொடர்பாக ஒரு விளக்கம் தரவேண்டிய நிலை.

காக்க காக்க திரைப்படத்தின் போதுதான் நீங்கள் என்னை சந்தித்தீர்கள்.  பிறகு உங்கள் அலுவலகத்திற்கு நான் வந்தேன்.  காக்க காக்க கதையின் சுருக்கத்தை விவரித்தீர்கள். அதன் பிறகு அந்தப் படத்தில் பணியாற்ற தொகை பேசினீர்கள்.  அப்போது நான் வாங்கிக்கொண்டிருந்ததை விடவும் மிகவும் குறைவாகக் குறிப்பிட்டீர்கள்.  என் சங்கடத்தைத் தெரிவித்தேன்.  அது முதல் காப்பி அடிப்படையில் நீங்களே தயாரிப்பாளராக செயல்படுவதால் நீங்கள் குறிப்பிட்ட தொகைதான் முடியும் என்று உறுதியாகச் சொன்னீர்கள்.

ஒரு படத்தில் திரைக்கதையும்,  வசனமும் எத்தனை முக்கியம் என்று நன்கு உணர்ந்த நீங்கள் அன்று கதாசிரியருக்கு உரிய நியாயமான தொகையை நிர்ணயிக்கத் தயாராய் இல்லை.  அந்தப் படத்திற்காக நான் ஒரு வரிகூட எழுதவில்லை.  உண்மை இப்படியிருக்க.. பொத்தாம் பொதுவாக கதாசிரியர்கள் கொடுத்த முதல் வடிவம் திருப்தியாய் இல்லை என்கிற பதிலில் என் பெயரும் சொல்லப்பட்டதால்..  விளக்கம் தர வேண்டியதாகிறது.
ஒரு வேளை 21 வருடங்கள் முன்பு நிகழ்ந்த சம்பவம் என்பதால் யாருக்கும் மறதி என்பது இயல்பானது என்று எடுத்துக்கொள்கிறேன்.

உங்கள் கதைக்கு மெருகேற்றும் பணிக்கு அழைக்காமல் திரைக்கேற்ற கதைகள் உங்களிடம் இருக்கிறதா என்று என்னை அணுகியிருந்தால்.. ஒரு வேளை நாமிருவரும் இணைந்து சில சுவாரசியமான படைப்புகளைத் தந்திருக்க முடியும் என்று இப்போது யோசிக்கிறேன்"

இவ்வாறு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தெரிவித்தார்.

Tags :
Advertisement