For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

கணபதி பப்பா மோரியா! - சென்னை பெருநகரங்களில் பிள்ளையார் சதுர்த்தி விழா கோலாகலம்!

சென்னை பெருநகரங்களில் பிள்ளையார் சதூர்த்தி விழாவில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட 2000 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
06:19 PM Aug 25, 2025 IST | Web Editor
சென்னை பெருநகரங்களில் பிள்ளையார் சதூர்த்தி விழாவில் பிள்ளையார் சிலையை வைத்து வழிபட 2000 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது.
கணபதி பப்பா மோரியா    சென்னை பெருநகரங்களில் பிள்ளையார் சதுர்த்தி விழா கோலாகலம்
Advertisement

Advertisement

வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சென்னை பெருநகரங்களில் பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு, பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட அனுமதி கோரி வந்தன.

விண்ணப்பங்களை ஆய்வு செய்த பெருநகர காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் அவர்கள், சுமார் 1,500 மனுக்களுக்கு மட்டுமே நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளார். அனுமதி வழங்கப்பட்ட இடங்கள் அனைத்திலும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க, போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உள்ளனர்.

குறிப்பாக, பிள்ளையார் சிலைகள் வைக்கப்படும் இடங்கள், ஊர்வலம் செல்லும் பாதைகள் மற்றும் சிலைகள் கரைக்கப்படும் கடற்கரை பகுதிகள் ஆகியவற்றில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். தேவைக்கேற்ப கூடுதல் போலீஸ் படைகள் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்படும்.

ஊர்வலத்தின்போது, எந்தவொரு பிரிவினருக்கும் இடையிலான பதற்றத்தைத் தவிர்க்க, போலீசார் இருதரப்பு மக்களையும் கண்காணிப்பார்கள். பிள்ளையார் சிலைகளைக் கரைக்கும் சமயத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க, கடற்கரை பகுதிகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

தீயணைப்புப் படை மற்றும் கடலோரக் காவல் படையினரும் தயார் நிலையில் இருப்பர். கரைக்கும் இடங்களில் எந்த ஒரு விபத்தும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது காவல்துறையின் முதன்மையான பணியாக இருக்கும். இந்த ஆண்டு, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிலைகள் தயாரிப்பில் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் போன்ற சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு சில அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

களிமண் மற்றும் இயற்கையான வண்ணங்களால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும், சிலைகள் கரைக்கும்போது நீர்நிலைகள் மாசுபடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :
Advertisement