சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாள் பிறந்தநாள் - மாலை அணிவித்து தவெக தலைவர் விஜய் மரியாதை!
சுதந்திர போராட்ட வீராங்கனை அஞ்சலையம்மாளின் பிறந்தநாள் விழா இன்று(ஜூன்.01) அனுசரிக்கப்பட்டு வருகிறது. பெரியார், அம்பேத்கர், வேலுநாச்சியார், காமராசர் ஆகியோருடன் சேர்த்து அஞ்சலையம்மாளையும் கொள்கை தலைவர்களில் ஒருவராக ஏற்கொள்வதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அக்கட்சியின் முதல் மாநாட்டில் தெரிவித்தார்.
அதன் பின்னர் சென்னை பனையூரில் உள்ள தவெக தமைமை அலுவலகத்தில் கொள்கை தலைவர்களின் உருவ சிலைகள் நிறுவப்பட்டது. தொடர்ந்து இன்று அஞ்சலையம்மாள் பிறந்தநாளுக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரின் எக்ஸ் பதிவில், “இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்த நாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள அஞ்சலையம்மாள் உருவசிலைக்கு மலர் மாலை அணிவித்து தவெக தலைவர் விஜய் மரியாதை செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றிய மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது.
இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது.
கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர்… pic.twitter.com/iUJRI2Xzp8
— TVK Vijay (@TVKVijayHQ) June 1, 2025
கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாளின் பிறந்த நாளையொட்டி, பனையூரில் உள்ள கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.