Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பல்கலைக்கழகங்களில் இலவச வைஃபை வசதி... ஒடிசா அரசின் புதிய திட்டம்!!

08:32 PM Nov 02, 2023 IST | Web Editor
Advertisement

ஒடிசா அரசு அனைத்து அரசுப் பல்கலைக்கழகங்களின் வளாகங்களிலும் இலவச வை-பை வழங்க முடிவு செய்துள்ளது.

Advertisement

அடுத்த கல்வியாண்டில் இருந்து ஒடிசா மாநிலத்தின் அனைத்து அரசுப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இலவச வைஃபை மற்றும் 1 ஜிபி டேட்டாவை வழங்கும் நிறுவல் செயல்முறை தொடங்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் பெரும்பாலான ஆய்வு ஆதாரங்கள் மற்றும் புத்தகங்கள் ஆன்லைனில் கிடைப்பதால், கல்விச் சூழலை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழக வளாகங்களில் மாணவர்களுக்கு இலவச வைஃபை வசதிகளை வழங்க ஒடிசா அரசு உத்தேசித்துள்ளது. எனவே, பல்கலைக்கழக வளாகங்களில் வைஃபை வசதிகளை நிறுவுவது தொடர்பாக ஜிஎஸ்டி மற்றும் சேவைக் கட்டணங்கள் உள்ளிட்ட விரிவான மதிப்பீட்டை செயல்படுத்தும் நிறுவனத்திடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஒடிசா அரசு பல்கலைக்கழகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மே மாத தொடக்கத்தில், அப்போதைய உயர் கல்வி அமைச்சர் ரோஹித் பூஜாரி, ஒடிசாவின் பல்கலைக்கழகங்களில் இலவச வைஃபை இருக்கும் என்று மாநில உயர்கல்வித் துறையின் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவித்திருந்தார்.

Advertisement
Next Article