Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மகளிர் தினத்தை முன்னிட்டு உணவு இலவசம்! - ஆனால் ஒரு கண்டிஷன்!

09:57 AM Mar 08, 2024 IST | Web Editor
Advertisement

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் உள்ள உணவகம் ஒன்று பெண்களுக்கு உணவு இலவசம் என அறிவித்துள்ளது. 

Advertisement

ஈரோடு மாவட்டம் கல்யாணசுந்தரம் சாலையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் மகளிர் தினத்தை முன்னிட்டு மருமகள் மற்றும் மாமியார் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி உணவை ஊட்டிக் கொள்ளும் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டி மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : மாசி மாத பிரதோஷம் மற்றும் சிவராத்திரியை முன்னிட்டு சதுரகிரி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

இந்த போட்டியில் கலந்து கொள்ளும் மாமியார் மற்றும் மருமகள் உணவகம் சார்பில் ஒரு கண்டிஷன் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதில், மாமியார் மற்றும் மருமகள் இருவரும் அன்பை பரிமாறும் வகையில் உணவை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி ஊட்டிக்கொண்டால் அவர்கள் சாப்பிடும் உணவு முழுவதும் இலவசமாக கொடுக்கப்படுகிறது.

இந்த போட்டியின் மூலம் மாமியார்,  மருமகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கி அவர்களுக்குள் நல் உறவை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டியானது நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த போட்டியில் ஏராளமான மாமியார், மருமகள் என பலரும் கலந்து கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags :
#InternationalWomensDayErodefoodfreeHotelInternationalWomensDay2024WomenEmpowermentWomensDayWomensDay2024
Advertisement
Next Article