For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குத்தகைக்கு வீடு எனக்கூறி மோசடி! வீட்டு உரிமையாளர்களே, வாடகைதாரர்களே உஷார்!!

07:06 PM Nov 07, 2023 IST | Web Editor
குத்தகைக்கு வீடு எனக்கூறி மோசடி  வீட்டு உரிமையாளர்களே  வாடகைதாரர்களே உஷார்
Advertisement

நடிகர்- நடிகைகளிடம் குத்தகைக்கு வீடு விட்டு ஏமாற்றிய எஸ்டிஎஸ்கே நிறுவனம் நடிகர் பிரபுதேவாவின் சகோதரர் நாகேந்திர பிரசாத்தையும் ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Advertisement

நடிகர் டேனி கொடுத்த புகாரில் கடந்த மே மாதம் எஸ்டிஎஸ்கே நிறுவனம் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். அதே நிறுவனம் நடிகர் நாகேந்திர பிரசாத் வீட்டை லீசுக்கு எடுத்து மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 லட்ச ரூபாய் பணத்தை விக்னேஷ் இடம் வாங்கிக் கொண்டு நடிகர் நாகேந்திர பிரசாத் இடம் 2022 ஆம் ஆண்டு வரை மாதம் 36 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்துள்ளது. இதனை அடுத்து எஸ்டிஎஸ்கே நிறுவனம் தரப்பினர் கடந்த ஒரு வருடமாக தலைமறைவானதால் நடிகர் நாகேந்திர பிரசாத்திற்கு வாடகையை இந்த நிறுவனம் தரவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த பிரச்சனையில் குத்தகைக்கு 25 லட்ச ரூபாய் பணம் கொடுத்த விக்னேஷ் என்பவர் புகாரில் தான் தற்போது தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி செய்த எஸ்டிஎஸ்கே நிறுவனம் உரிமையாளர் கட்டப்பா சிவகுமாரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தேடி வருகின்றனர். பெங்களூரிலும் இதே போன்ற மோசடியில் இந்த நிறுவனத்தின் மீது வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement