For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தமிழ்நாடு முழுவதும் நாற்பதாயிரம் வருவாய்த்துறையினர் போராட்டம்!

தமிழ்நாடு முழுவதும் நாற்பதாயிரம் வருவாய்த்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10:56 AM Jun 25, 2025 IST | Web Editor
தமிழ்நாடு முழுவதும் நாற்பதாயிரம் வருவாய்த்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு முழுவதும் நாற்பதாயிரம் வருவாய்த்துறையினர் போராட்டம்
Advertisement

தமிழ்நாடு வருவாய்த்துறையில் பிரதானமாக உள்ள வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம், நில அளவையாளர் சங்கம், கிராம நிர்வாக உதவியாளர்கள் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் 40,000 வருவாய்த்துறையினர் இன்று(ஜூன்.25) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement

இந்த போராட்டம் வருவாய்த்துறையினருக்கு பணி பாதுகாப்பு ,காலியாக பணியிடங்கள் நிரப்ப, களப்பணிகளுக்கு உரிய கால அவகாசம், ஜுலை 1 ஆம் தேதியை வருவாய்த்துறை தினமாக அறிவிக்க உள்ளிட்ட 7  அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துகின்றனர்.

அதே போல் மதுரையில் உலக தமிழ்ச் சங்கத்திலிருந்து கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் விரைவில் தமிழ்நாடு முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடத்த வருவாய்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இன்று நடைபெற்று வரும் ருவாய்த்துறையினரின் போராட்டத்தால் அலுவலகங்களில் பணிகளில் பாதிப்படைந்துள்ளது.

Tags :
Advertisement