Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மறைந்த பின்பும் முஷாரஃபுக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டணை- பாக். உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

10:36 AM Jan 11, 2024 IST | Web Editor
Advertisement

மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

Advertisement

பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரஃப் அறிவித்தார். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவர் நிறுத்திவைத்தார்.  இது தொடர்பாக நடைபெற்று வந்த தேசத் துரோக வழக்கில் முஷாரஃபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

ஆனால்,  சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று  லாகூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இது தொடர்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு,  லாகூர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது.

இதையும் படியுங்கள்: அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை..!

இந்த நிலையில் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.   துபையில் நாடு கடந்து வசித்து வந்த முஷாரஃப் (79),  உடல்நலக் குறைவு காரணமாக 2023 பிப்ரவரி 5-ல் காலமானார்.

Tags :
judgementnews7 tamilNews7 Tamil UpdatespakistanPervez MusharrafSupreme court
Advertisement
Next Article