For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்கள்! குத்தாலம் கோயிலில் ஆர்வத்துடன் தரிசித்த பக்தர்கள்!

10:17 AM Apr 12, 2024 IST | Web Editor
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் உத்தால மலர்கள்  குத்தாலம் கோயிலில் ஆர்வத்துடன் தரிசித்த பக்தர்கள்
Advertisement

குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே
பூக்கக் கூடிய உத்தால மலர் பூத்துக்குலுங்கியதை பக்தர்கள் ஆர்வமுடன் தரிசனம் செய்தனர்.

Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில்
அமைந்துள்ளது.  இத்தலத்தில் சிவபெருமான்,  பார்வதி தேவியைத் திருமணம் செய்து
கொள்வதற்காக கைலாயத்தில் இருந்து வந்த போது அவருக்கு நிழலாக உத்தால மரம்
வந்துள்ளது.  திருக்கல்யாணம் முடிந்து சுவாமி,  அம்பாள் கைலாயம் செல்லும் போது
சுவாமி இத்தலத்தில் உத்தால மரத்தையும்,  தனது பாதரட்சையையும் விட்டுச்
சென்றதாக வரலாறு கூறுகிறது.

இதையும் படியுங்கள் : நெல்லை, கோவையில் ராகுல் காந்தி இன்று பரப்புரை – பொதுமக்கள் திரண்டு வருமாறு செல்வப்பெருந்தகை அழைப்பு!

இதையடுத்து,  1500 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் இன்றளவும் இக்கோயில் தலவிருட்ச மரமாக இந்த உத்தால மரம் பசுமையுடன் காணப்படுகிறது.  இந்த
மரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை பங்குனி மாதம் கடைசியிலும்,  சித்திரை மாதம் முதல்
வாரத்திலும் மலர்கள் பூப்பது வழக்கம்.  அந்த வகையில் இந்தாண்டும் இத்தலத்தில் உள்ள உத்தால மரத்தில் பூக்கள் பூத்துக் குலுங்கியது.

உத்தால மரத்தில் பூக்கள் பூத்திருப்பதை ஏராளமானோர் ஆர்வமுடன் வந்து
பார்த்து தரிசித்து சென்றனர்.  இந்த உத்தாலம் மலர் ஐந்து விதமான இதழ்களையும்,
ஐந்து வகையான சுவையையும் உடையது. மருத்துவ குணம் வாய்ந்த இந்த மலர் மனிதர்கள் உண்ண உகந்தது.  இந்த உத்தால மரம் உலகில் வேறு எங்கும் இல்லாதது தனிச் சிறப்பு வாய்ந்தது.

Tags :
Advertisement