For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முக்காணியில் வெள்ளம் - லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை..!

10:12 AM Dec 20, 2023 IST | Jeni
முக்காணியில் வெள்ளம்   லாட்ஜில் சிக்கித் தவிக்கும் 200 பேரை மீட்க கோரிக்கை
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் வெள்ளம் காரணமாக தனியார் லாட்ஜ் ஒன்றில் உணவின்றி சிக்கித் தவித்து வரும் 200-க்கும் மேற்பட்டோரை மீட்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தொடர்ந்து தென் மாவட்டங்களில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் முக்காணி கிராமம் மற்றும் அதன் அருகில் உள்ள ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த 17-ம் தேதி முக்காணி ஜங்கஷனுக்கு வந்த சுமார் 200 நபர்கள், அங்குள்ள உமரி தங்கம் லாட்ஜ் மற்றும் சுற்றியுள்ள இடங்களிலும் சிக்கியுள்ளனர். 3 நாட்களாக அவர்கள் உணவு, தண்ணீர், அத்தியாவசியப் பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : ஒவ்வொரு குடிமகனுக்கும் தேவையான குடிநீர் தாராளமாக இருக்கிறது..! - மத்திய அரசு விளக்கம்

எனவே அரசு நிர்வாகமோ, தன்னார்வ தொண்டு உதவி இயக்கங்களோ, உதவிக் கரம் நீட்டும் இயக்கங்களோ உடனடியாக உதவ அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள சூழ்நிலை குறித்து அறிய 9677062377, 8939192665, 04630-275477, 9344178023, 7550352800 ஆகிய எண்களை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Tags :
Advertisement