For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு - 2 பேர் உயிரிழப்பு!

இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளபெருக்கினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
08:45 AM Jun 26, 2025 IST | Web Editor
இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளபெருக்கினால் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் திடீர் வெள்ளப்பெருக்கு   2 பேர் உயிரிழப்பு
Advertisement

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் இமாச்சலப் பிரதேசத்தில், மேகவெடிப்பு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பார்வதி நதி நிரம்பி வழிவதால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

Advertisement

அதேபோல், குல்லுவில் மேகவெடிப்பு காரணமாக 'ஜீவா' சிற்றாற்றில் திடீர் வெள்ளம்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மறுபுறம், இந்துஸ்தான்-திபெத் தேசிய நெடுஞ்சாலையில் (NH 5) ஜக்ரியில் நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக காங்கிரா மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 20 பேர் வரை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மேலும் குல்லுவில் 3 பேர் மாயமாகியுள்ளனர்.

நிலச்சரிவு மற்றும் பனிப்பாறை உருகியதால் காசா-சம்தூ சாலை முழுமையாக அடைக்கப்பட்டுள்ளது. பாலம்பூர், ஜோகிந்தர்நகர், நஹான் ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை முதல் அதிக கனமழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து காங்கிரா, மண்டி, சிம்லா, சிர்மௌர் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags :
Advertisement