Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடி திருவிழா: கண்மாயில் இறங்கி போட்டி போட்டு மீன்பிடித்த கிராம மக்கள்!

10:47 AM May 02, 2024 IST | Web Editor
Advertisement

பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் உள்ள கொப்பான் கண்மாயில் மழை வேண்டியும் விவசாயம் செழிக்க வேண்டியும் நடைபெற்ற மீன்பிடித்திருவிழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு  மீன்பிடித்து மகிழ்ந்தனர்.

Advertisement

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின்னர் கோடைகாலத்தில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில் சாதி,மதம் பாராமல் அனைத்து மக்களும் கலந்து கொள்ளக்கூடியது மீன்பிடித் திருவிழா ஆண்டுதோறும் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் ஊர் ஒற்றுமைக்காகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுற்றுவட்டாரப் பகுதிகளில்   தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று பொன்னமராவதி  அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் கொப்பான் கண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கண்மாயில் அதிகாலையில் மீன்பிடி உபகரணங்களோடு கண்மாயில் குவிந்தனர்.

இதையும் படியுங்கள் : திருவொற்றியூர் வட்டப்பாறை வடிவுடையம்மன் அம்மன் கோயில் உற்சவம் – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

பின்னர் ஊர் முக்கியஸ்தர்களால் நடு மடையில் உள்ள மடை கருப்பரை வழிபாடு செய்யப்பட்டது.  அதன் பிறகு வெள்ளை வீசி போட்டியை தொடங்கி வைத்தனர். இதையடுத்து, ஒரே நேரத்தில் கிராம பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவைகளை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர்.

அதில் பங்கேற்றவர்களுக்கு நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, விரால்,அயிரை ஆகிய மீன்கள் கிடைத்தன. பிடித்த மீன்களை கிராம மக்கள் மகிழ்ச்சியோடு வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

Tags :
fishingFishing FestivalKanmaiPonnamaravatiVillage
Advertisement
Next Article