Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#FishermenArrest | எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது!

09:04 AM Dec 24, 2024 IST | Web Editor
Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

Advertisement

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. மீனவர்களை கைது செய்வதுடன் அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து விடுவர். இவ்வாறு கைது செய்யப்படும் மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்படுவர். இது போன்ற கைது நடவடிக்கைகளை தடுக்க அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இச்சம்பம் அவ்வப்போது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டு மீனவர்கள் தற்போதும் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 17 மீனவர்கள் 2 விசைப்படகுகள் மூலம் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 17 பேரையும் கைது செய்தனர்.

அதனுடன் அவர்களின் 2 விசைப்படகுகளையும் சிறைபிடித்துச் சென்றனர். இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகள் மீனவர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வர மீனவர்களை உடனடியாக விடுவிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
ArrestDhanuskodiFishermenIndian Fishermennews7 tamilRameswaramsrilankan navy
Advertisement
Next Article