For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இலங்கைக்கு எதிரான டி20 போட்டி : முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா!

07:26 AM Jul 28, 2024 IST | Web Editor
இலங்கைக்கு எதிரான டி20 போட்டி   முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா
Advertisement

இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Advertisement

இலங்கை நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. பல்லகெலெவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இந்திய அணிக்கு துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் களமிறங்கினர். இதையடுத்து, சுப்மன் கில் 34 ரன்களில் அவுட் ஆனார்.

இவரைத் தொடர்ந்து ஜெய்ஸ்வால் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் களமிறங்கினர். இருவரும்  58 மற்றும் 49 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்து, களமிறங்கிய வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இந்நிலையில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்களை குவித்தது.

இதையும் படியுங்கள் : 9 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம் - புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கைலாசனாதனை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

இந்திய அணியை தொடர்ந்து, களமிறங்கிய இலங்கை அணியின் வீரரான பதும் நிசங்கா 79 ரன்களையும், குசல் மென்டிஸ் 45 ரன்களையும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய குசல் பெரரா மற்றும் கமின்டு மென்டிஸ்  20 மற்றும் 12 ரன்களை எடுத்து அவுட் ஆகினர். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் சரித் அசலங்கா மற்றும் தசுன் சனகா, தில்ஷன் மதுசனகா ஆகியோர் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகினர்.

அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இலங்கை அணி 19.2 ஓவர்களில் 170 ரன்களை எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக இந்திய அணி 43 ரன்களில் வெற்றி பெற்று அசத்தியது.

Tags :
Advertisement