Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் மீது பாய்ந்த வழக்கு; பெண் மருத்துவரை வளர்ப்பு நாயை விட்டு கடிக்க வைத்ததாக புகார்!

04:00 PM Nov 02, 2023 IST | Web Editor
Advertisement

சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷனின் வீட்டு நாய்கள் பெண்ணை கடித்ததை அடுத்து, நடிகர் மற்றும் நாய் பராமரிப்பாளர் மீது காவல்நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

பிரபல கன்னட நடிகர் சேலஞ்சிங் ஸ்டார் தர்ஷன் மீது அமிதா ஜிண்டால் என்ற பெண் புகார் அளித்துள்ளார்.  தர்ஷனின் வீட்டு நாய் கடித்தது என்று பெண் ஆர்.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 28 அன்று, பர்ஷா மருத்துவமனையில் உலக முடக்குவாத தினத்தை முன்னிட்டு புகார் அளித்த பெண் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்.  அப்போது,  ​​தர்ஷனின் வீட்டை அடுத்துள்ள காலி மனையை ஒட்டியுள்ள வீதியில் காரை நிறுத்தியுள்ளார்.  நிகழ்ச்சி முடிந்து திரும்பி வந்த போது கார் நிறுத்திய இடத்தில் மூன்று நாய்கள் இருந்தன.

இதனால் தர்ஷன் வீட்டு ஊழியர்களுக்கும்,  அந்த பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.  இந்நிலையில்,  இரண்டு வளர்ப்பு நாய்கள்,  பெண் மீது பாய்ந்து கடித்ததாக  கூறப்படுகிறது.  இது தொடர்பாக நடிகர் தர்ஷன் மீது அந்த பெண் மருத்துவர் புகார் அளித்தார்.

நாயை பராமரித்து வந்த ஊழியர் ஹேமந்த்,  எங்கள் மீது எந்த தவறும் இல்லை என கூறி வருகிறார்.  ஆர்.ஆர்.நகர் காவல்நிலையம் நேற்று (நவம்பர் 1) ஹேமந்திடம் வாக்குமூலம் பதிவு செய்தது.  இது குறித்து நாய் பராமரிப்பாளர் ஹேமந்த் கூறுகையில், நாங்கள் வேண்டுமென்றே அந்த பெண்ணிடம் நாயை விடவில்லை, இது தற்செயலான சம்பவம்.

பெண் மருத்துவரின் கடும் குற்றச்சாட்டை அடுத்து, நடிகர் தர்ஷன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Next Article