Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

’D3’ திரைப்படத்தின் இயக்குநருக்கு ஒரு மாதம் சிறை - காரணம் என்ன?

05:59 PM Apr 06, 2024 IST | Web Editor
Advertisement

'டி 3' திரைப்படத்தின் இயக்குநருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் பிரஜின் நடிப்பில் உருவாகிய திரைப்படம் 'டி3' (D3).  இத்திரைப்படத்தில் வித்யா பிரதீப், சார்லீ என பலர் நடித்துள்ளனர்.  இப்படத்தினை பி மாஸ் என்டர்டைன்மெண்ட் & ஜே கே எம் புரொடக்ஷன் என்னும் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் ஸ்ரீஜித் இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவானது.  இப்படம் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.  இதனிடையே இத்திரைப்படத்தை தயாரிக்க சாமுவேல் காட்சனிடம் 4 கோடி ரூபாயைப் பெற்ற தயாரிப்பாளர் மனோஜ், படத்தில் உரிமையில் 60 சதவீதத்தை சாமுவேலுக்கு வழங்குவதாக ஒப்பந்தமும் செய்தார்.

ஒப்பந்தத்தை மீறி படத்தை வெளியிட்டதாக கூறி சாமுவேல் காட்சன் தொடர்ந்த வழக்கில், 'டி 3' படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  மேலும் படத்தின் மூலம் கிடைத்த வருவாய் விவரங்களை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை மீறி, படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதாக பட இயக்குனர் பாலாஜி, தயாரிப்பாளர் மனோஜ் ஆகியோருக்கு எதிராக சாமுவேல் காட்சன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வேல் முருகன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரை நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி நேரில் ஆஜரான இயக்குனர் பாலாஜி, நீதிமன்ற உத்தரவை மீறி படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டார்.  இதனையடுத்து, அவருக்கு ஒரு மாத சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.  நீதிமன்றத்தில் ஆஜராகாத தயாரிப்பாளர் மனோஜுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஏப்ரல் 24ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags :
Balajichennai High CourtD3Director BalajiottPrajin Padmanaban
Advertisement
Next Article