Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சித்திரை திருவிழா: மீனாட்சி திருக்கல்யாண டிக்கெட் முன்பதிவு தொடக்கம்!

11:58 AM Apr 09, 2024 IST | Web Editor
Advertisement

மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண தரிசனத்திற்கான கட்டணச் சீட்டு முன்பதிவு இன்று துவங்கியது.

Advertisement

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் சித்திரைத் திருவிழா நாளை முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.   இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண உற்சவம் ஏப். 21 ஆம் தேதி கோயிலின் வடக்காடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதற்காக இந்து சமய அறநிலையத் துறை இணைய தளம் மற்றும் கோயில் இணைய தளம் ஆகியவை மூலம் இன்று முதல் 13ஆம் தேதி இரவு 9 மணி வரை ரூ.500,  ரூ.200 கட்டணச் சீட்டு முன்பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.  அந்த வகையில், ரூ.200 கட்டணச் சீட்டில் ஒருவா் மூன்று சீட்டுகளையும்,  ரூ.500 கட்டணச்சீட்டில் ஒருவா் இரண்டு சீட்டுகளையும், பதிவு செய்யலாம்.

ஒரு சீட்டுக்கு ஒரு கைப்பேசி எண் மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும் சிறாா்களை அழைத்து வருவதைத் தவிா்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.  மேலும், பக்தர்கள் வசதிக்காக கோயிலுக்குச் சொந்தமான மேற்கு சித்திரை வீதியிலுள்ள தங்கும் விடுதியில் கோயில் பணியாளர்கள் மூலம் கட்டணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பதிவு செய்தவர்களுக்கு அவர்கள் குறிப்பிட்டுள்ள செல்பேசி எண்ணுக்கு ஏப்.14ஆம் தேதி குறுஞ்செய்தி அனுப்பப்படும்.  குறுந்தகவல் கிடைக்கப் பெற்றவர்கள்,  ஏப்.15ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை காலை 10 முதல் மாலை 5 மணி வரை விஷ்ரம் தங்கும் விடுதியில் விற்பனை மையத்தில் கட்டணச் சீட்டு பெறலாம்.

கட்டணச் சீட்டு பெற்றவா்கள் திருக்கல்யாணத்தன்று காலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டது.

Tags :
Chithirai festivalMaduraiMadurai Meenakshmi TempleMeenakshi Sundaraswarar Temple
Advertisement
Next Article