Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

AC காற்றுக்காக சண்டை.. நின்று போன திருமணம்.. புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம்.. - ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாம சோதனை!

04:03 PM Jul 14, 2024 IST | Web Editor
Advertisement

ஏர்கூலருக்காக நடந்த சண்டையில் மணமகள் திருமணத்தை நிறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்து நடைபெற்று பேச்சுவார்த்தையில் மணமக்கள் இருவரின் குடும்பத்தினருக்கும் புதிய குற்றவியல் சட்டத்தில் அபராதம் விதித்து காவல்துறையினர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

திருமணம் என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று . மதம் , சாதி, பண்பாடு, கலாச்சாரம் என மனிதர்களிடையே பல முரண்பாடுகள் இருந்தபோதிலும் திருமணம் எனும் சடங்கு மட்டும் அனைத்து தரப்பிலும் உண்டு. ஆனால் திருமணத்தின் வகைகளும், முறையும் மட்டும் மாறுபடும்.

 பல வகையான திருமணங்களை நாம் பார்த்திருக்கிறோம். மத வழிபாட்டுத் தலங்கள், சர்பதிவாளர் அலுவலங்கள், காவல் நிலையங்கள் , பெரிய பெரிய நட்சத்திர விடுதிகள் போன்றவற்றில் திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆனால் பெரும்பாலான திருமணங்கள் மணமக்கள் இல்லத்தில் பெரும் கொண்டாங்களோடு நடைபெறுகின்றன.

திருமணம் என்பது நமது இந்தியக் கலாச்சாரத்தில் மிகப்பெரும் கொண்டாட்டமாகவும், ஒரு தவிர்க்க முடியாத சடங்காகவும் பார்க்கப்படுகிறது. திருமணத்திற்கான கொண்டாட்டங்கள் ஒரு திருவிழாவிற்கு நிகராக பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் இருந்து தொடங்குகிறது.

அப்படி எல்லாம் கைகூடி நல்லபடியாக திருமணத்தினை நடத்திவைக்கும்போது அனைவரும் பெரும் மகிழ்ச்சியோடு இருக்க சிலர் மட்டும் திருமணம் நல்லபடியாக முடிந்தால் தான் நிம்மதி என கொஞ்சம் பீதியோடுதான் இருப்பர். திருமணத்தில் என்னதான் பல குடும்பங்கள் ஒன்றுசேரும் நிகழ்வு நடைபெற்றாலும் சண்டை சச்சரவுகள் நடைபெற்று குடும்பங்கள் பிரிந்து போவதும் சில இடங்களில் நடக்கத்தான் செய்கிறது. இதுபோலத்தான் ஒரு சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் புல்சந்தர் மாவட்டத்தில் உள்ள சித்பர்காவுன் எனும் கிராமத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் மணமேடையில் மணமக்கள் இருவரும் அமர்ந்திருக்க அங்குதான் பிரச்னை ஆரம்பத்துள்ளது. திருமணப் பந்தலில் ஏர்கூலர் வைக்கப்பட்டிருக்க அதன் அருகில் யார் உட்காருவது என தொடங்கிய சண்டை மணமக்கள் வீட்டாரிடையே கைலகலப்பாக மாறியது. சண்டை முற்றவே இதனைத் தொடர்ந்து கோபத்தில் திருமணம் வேண்டாம் என மணமகள் மறுத்துவிட்டார்.

மணமகனை திருமணம் செய்ய அங்கிருந்த மக்கள் வற்புறுத்தியும் மணப்பெண் திருமணம் வேண்டாம் என்ற முடிவை மாற்றவில்லை. பின்னர் இந்த விவகாரம் கிராம பஞ்சாயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நள்ளிரவு வரை கூட்டம் நடைபெற்றது. அங்கும் எந்த முடிவும்  எட்டப்படாததால் இரு தரப்பு மக்களும் போலீசாரை அணுகினர்.

இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமரசம் செய்ய முயன்றனர், இருப்பினும் காவல்துறையால் ஒரு தீர்வு எட்ட முடியவில்லை. நீண்ட சலசலப்புக்குப் பிறகு, அப்பகுதியில் அமைதியைக் குலைத்ததாக இரு தரப்பினருக்கும் ரூ.151 அபராதம் விதித்த காவல்துறையினர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

புதிய குற்றவியல் சட்டமான பாரதிய நியாய சன்ஹிதாவின்படி பிரிவு 126 சட்டத்திற்கு விரோதமாக கட்டுப்பாடு விதித்தாக  கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது அப்பகுதியின் காவல்நிலைய அதிகாரி ஜெய்ஷ்வால் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.  இந்த வழக்கில் மணமகன் ஹுக்கும் சந்த் ஜெய்ஸ்வால், அவரது உறவினர் பங்கஜ், மணமகளின் தந்தை நந்த் ஜி குப்தா மற்றும் அவரது சகோதரர் ராஜேஷ் குப்தா ஆகியோர் காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்படத்தக்கது.

Tags :
ACair coolerfineMarriageNew Criminal Actup
Advertisement
Next Article