For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தொடங்கியது ஜனநாயக திருவிழா - தமிழ்நாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்!

07:02 AM Mar 20, 2024 IST | Web Editor
தொடங்கியது ஜனநாயக திருவிழா   தமிழ்நாட்டில் இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்
Advertisement

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழ்நாட்டில் தொடங்க உள்ள இன்று முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது.

Advertisement

டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் கடந்த 16.03.2024 அன்று தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில்,  நாட்டில் ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படவிருக்கிறது.

முதல்கட்ட வாக்குப்பதிவு

முதல்கட்ட வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.  ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இரண்டாம் கட்டம்

மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.  இந்த நாளில், 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

மூன்றாம் கட்டம்

நாடு முழுவதும் உள்ள 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 94 தொகுதிகளுக்கு மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.

நான்காம் கட்டம்

நான்காம் கட்ட வாக்குப்பதிவு மே 13ஆம் தேதி 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 96   தொகுதிகளில் நடைபெறுகிறது.

ஐந்தாம் கட்டம்

ஐந்தாம் கட்ட தேர்தல் மே 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஒடிசா, மஹாராஷ்டிரா, ஜம்மு - காஷ்மீர்,  ஜார்கண்ட்,  உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட 8 மாநிலங்களில் உள்ள 49  தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

ஆறாம் கட்டம்

6-ம் கட்ட தேர்தல் மே 25-ஆம் தேதி நடைபெறும் நிலையில்,  அன்று மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.  குறிப்பாக ஹரியானா, டெல்லி, பீகார், உத்தரப்பிரதேசம், ஒடிஷா, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் ஆறாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு - News7 Tamilஏழாம் கட்டம்

ஏழாம் கட்ட தேர்தல் மீதமுள்ள 57 தொகுதிகளுக்கு ஜூன் 01-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் ஹிமாச்சல பிரதேசம், சத்திஸ்கர், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிஷா உள்ளிட்ட 8 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனை அடுத்து ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

இந்த நிலையில் முதற்கட்டமாக தேர்தல் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற உள்ள நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்க உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இந்த மாதம் 27-ந் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை மார்ச் 28-ந் தேதி நடைபெறுவதுடன், மனுக்களைத் திரும்பப் பெற மார்ச் 30-ந் தேதி கடைசி நாளாகும்.

Tags :
Advertisement