Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

முன்னாள் மனைவி புகார்... நடிகர் பாலா கைது!

12:44 PM Oct 14, 2024 IST | Web Editor
Advertisement

மகள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியதாக நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

தமிழில் ‘அன்பு’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பாலா. காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா, மஞ்சள் வெயில் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். பாலாவுக்கும் கேரளாவைச் சேர்ந்த அம்ருதா என்பவருக்கும் கடந்த 2010-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. அம்ருதா மலையாள திரையுலகில் பின்னணி பாடகியாக உள்ளார்.

இதனிடையே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் 2021 ஆம் ஆண்டு எலிசபெத் என்பவரை பாலா திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் இவர்களுக்கும் விவாகரத்து ஆகிவிட்டது என்று செய்திகள் வந்தன. இந்நிலையில் நடிகர் பாலா கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக குழந்தை தொடர்பாக நடிகர் பாலாவுக்கும், அவரது முன்னாள் மனைவி அமிர்தா சுரேஷுக்கும் இடையே வாய்த்தகராறு நிலவி வருகிறது. இதில் பாலா, தனது முன்னாள் மனைவி மற்றும் பெண் குழந்தைக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கொச்சியில் உள்ள கடவந்தரா காவல் நிலையத்தில் பாலாவின் முன்னாள் மனைவி அமிர்தா சனிக்கிழமை புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இவ்விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை பாலாவை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அவர் ஆஜராகாததையடுத்து, கொச்சியில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற காவல்துறையினர், அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நடிகர் பாலா, பிரபல இயக்குநர் சிறுத்தை சிவாவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
ArrestBalaMalayalam Actor
Advertisement
Next Article