Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வீட்டில் வெடித்த குண்டு... முன்னாள் எம்.எல்.ஏ மனைவி பலி!

09:57 PM Aug 11, 2024 IST | Web Editor
Advertisement

மணிப்பூர் மாநிலத்தில் முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் குண்டுவெடித்ததில் அவரது மனைவி உயிரிழந்தார்.

Advertisement

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள எகோ முலாம் பகுதியில், முன்னாள் எம்எல்ஏ யம்தோங் ஹௌகிப் வசித்து வருகிறார். இவர் கடந்த 2012 மற்றும் 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சாய்குல் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் கடந்த 2022-ம் ஆண்டு பாஜக-வில் இணைந்தார்.

இந்நிலையில், இவரது மனைவி சபம் சாருபாலா (59 வயது). இவர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டில் இருந்த குப்பைகளை எரித்துள்ளார். அப்போது திடீரென அதிலிருந்த வெடிகுண்டு வெடித்ததில் அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக நிலம் வாங்கியது தொடர்பாக ஹாக்கிப்புக்கும் அவரது உறவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக அவர்கள் நாட்டு வெடிகுண்டை குப்பைக்குள் மறைத்து வைத்திருக்கலாம் என்றும் சந்தேகப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags :
Bomb ExplosionCrimeIndiainvestigationManipurPoliceViolence
Advertisement
Next Article