Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"மாலை நேரம் மழை நேரம்" - அடுத்த சில மணி நேரத்திற்குள் 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

பல மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
06:09 PM Aug 01, 2025 IST | Web Editor
பல மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement

 

Advertisement

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

அந்த வகையில் வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும்போது இடி மற்றும் மின்னல் தாக்க வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழை, தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
RainAlertTamilnaduRainsThunderstormTNWeatherWeatherUpdate
Advertisement
Next Article