For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் - ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!

09:43 PM Dec 25, 2023 IST | Web Editor
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர்   ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
Advertisement

தூத்துக்குடியில் மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு பலியான தற்காலிக மின்வாரிய ஊழியர் முருகன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சோ்ந்தவர் அண்ட் முருகன் (45). மாநகராட்சி ஒப்பந்த மின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று (டிச. 24) கிருஷ்ணராஜபுரம் 5வது தெரு பகுதியில் மழை வெள்ளத்தால் பழுதடைந்த மின் வயர்களை சீர் செய்வதற்காக மின்கம்பத்தில் ஏறி சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில், அவர் மின் கம்பத்திலேயே உயிரிழந்தார்.

இதைத்தொடர்ந்து அவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி ஆறுதல் தெரிவித்தார். இந்நிலையில் மின்சாரம் தாக்கி பலியான மாநகராட்சி தற்காலிக மின் பணியாளர் முருகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும், அவரது குடும்பத்தினருக்கு 5 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags :
Advertisement