For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி!" - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி!

04:57 PM Mar 16, 2024 IST | Web Editor
 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி     தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
Advertisement

18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நாளை தான் கடைசி நாள் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

Advertisement

டெல்லியில் தேர்தல் ஆணையக அலுவலகத்தில் இன்று (மார்ச் - 16) தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் புதிதாக தேர்வான தேர்தல் ஆணையர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.  அப்போது தலைமை தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பில்,  நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதாகவும், தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

இதையும் படியுங்கள் : மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் – ஏப்.19 முதல் ஜூன் 1 வரை நடைபெறும் என அறிவிப்பு!

அப்போது அவர் கூறியதாவது :

"தமிழ்நாட்டில் இந்த ஆண்டு நாராளுமன்ற தேர்தல் ஒரே கட்ட தேர்தலாக  ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும். இதையடுத்து, தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதியில் ஏப்ரல் 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும். பொன்முடி, சட்டமன்ற உறுப்பினராக தொடர்வதால், திருக்கோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் கிடையாது.

பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர், வீடியோ கண்காணிப்பு குழுவினர் தேர்தல் நேரத்தில் பணிகளை தொடங்க உள்ளனர். 85 வயதிற்கு மேல் உள்ள முதியோர்கள் விட்டிலிருந்தே தபால் மூலம் வாக்கு செலுத்தலாம். 12டி விண்ணப்பத்தை பயன்படுத்த வேண்டும். இப்தார் நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் பங்கேற்கலாம். ஆனால், வாக்கு சேகரிக்க கூடாது. மேலும், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் திங்கள்கிழமை (மார்ச் - 18 ) ஆலோசனை நடத்தப்படும்.

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அதனால், ரூ.50 ஆயிரம் பணம் மட்டுமே கையில் எடுத்துச் செல்லலாம். தேர்தலுக்கு 7 நாட்கள் முன்பு பூத் சிலிப் வழங்கப்படும்.
அரசாணை எதுவும் இனிமேல் வெளியிட கூடாது. பொன்முடி பதவி ஏற்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும். 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நாளைதான் கடைசி நாள்"

இவ்வாறு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

Tags :
Advertisement