Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மாநிலங்களவையில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிப்பு!

03:35 PM Aug 07, 2024 IST | Web Editor
Advertisement

மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

அதன்படி, மாநிலங்களவையில் காலியாக உள்ள 12 இடங்களுக்கு வருகிற செப். 3-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அசாம், பீகார், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தலா 2 இடங்களுக்கும், ஹரியாணா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, தெலங்கானா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு இடம் என மொத்தம் 9 மாநிலங்களில் 12 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஆக. 14-ம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆக. 21. வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் -அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், திரிபுரா மாநிலங்களுக்கு ஆக. 26 எனவும், பீகார், ஹரியாணா, தெலங்கானா, ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு ஆக. 27 கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு செப். 3-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் வாக்கு எண்ணிக்கை அன்றைய தினமே மாலை 5 மணிக்கு நடைபெறும். மாநிலங்களவையில் எம்.பி.க்களாக இருந்த சிலர் மக்களவைக்குத் தேர்வான நிலையில் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
By poolsECIElectionNews7Tamilnews7TamilUpdatesRajya sabha
Advertisement
Next Article