For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை!

04:29 PM Jun 15, 2024 IST | Web Editor
சத்தீஸ்கரில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை
Advertisement

சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருக்கும்,  நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 8 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.  மேலும் ஒரு பாதுகாப்பு படை வீரரும் மரணமடைந்துள்ளார். 

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் அபுஜ்மரில் நக்சலைட்டுகள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் 4 மாவட்ட போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் நக்சலைட்டுகள் 8 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் இறந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இரண்டு பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து சுக்மா, தந்தேவாடா, நாராயண்பூர் கான்கேர் ஆகிய 4 மாவட்டங்களில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாகவே இப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.

Tags :
Advertisement