முட்டை விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் இவ்வளவா?
நாமக்கல் மண்டலத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகளில் தினமும் 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. நாமக்கல்லில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா மற்றும் வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இதற்கிடையே, நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.45 ஆக இருந்த சூழலில் நேற்று முன்தினம் 05 காசுகள் உயர்ந்து ரூ.5.50 ஆகவும், நேற்று மேலும் 05 காசுகள் உயர்ந்து ரூ.5.55க்கு விற்பனையானது.
இதையும் படியுங்கள் : கனமழை எதிரொலி | பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
இந்த நிலையில் முட்டை விலை இன்று (ஜூன் 25) மீண்டும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று 5காசுகள் உயர்ந்து முட்டை விலை ரூ.05.60 ஆக நிர்ணயம் செய்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. மேலும், சென்னையில் முட்டை விலை ரூ.6.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு அளிக்கப்படும் தீவன பொருட்களான மக்காச்சோளம், சோயா ஆகியவற்றில் விலை உயர்ந்துள்ளதும், பண்ணைகளில் தற்போது முட்டை உற்பத்தி குறைவாக இருப்பதும் முட்டை விலை உயர்விற்கான முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. முட்டை விலை மேலும் அதிகரித்தால் ஓட்டல்களில் முட்டை சார்ந்த உணவு பொருட்களான ஆம்லெட், முட்டை பரோட்டா உள்ளிட்டவைகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.