Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆம் ஆத்மி அமைச்சர் வீட்டில் ED ரெய்டு - யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?

11:16 AM Nov 02, 2023 IST | Jeni
Advertisement

டெல்லி அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

Advertisement

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ஆஜராக உள்ளார். இந்நிலையில் டெல்லி சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த்தின் இல்லம் மற்றும் அவருக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

யார் இந்த ராஜ்குமார் ஆனந்த்?

டெல்லி படேல் நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ராஜ்குமார் ஆனந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில், பல இலாகாக்களை இவர் கொண்டுள்ளார். அதில் சமூகநலத் துறை,  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்டவை அடங்கும்.

57 வயது அரசியல்வாதியான ராஜ்குமார் தனது ஆரம்பக் கல்வியை கற்பதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு பூட்டு தொழிற்சாலையில் குழந்தைத் தொழிலாளியாக பணிபுரிந்தார்.  பின்னர் டியூஷன் எடுத்து, அதன் மூலம் தனது எம்.ஏ., படிப்பை முடித்தார்.

இதையும் படியுங்கள் : மகளிர் உரிமைத்தொகை - 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு!!

அரசியலில் சேருவதற்கு முன்னர்,  அவர் ரெக்சின் தோல் விற்பனையில் தொழிலதிபராக இருந்தார்.  சமூக ஆர்வலராகவும் இருந்த ராஜ்குமார், பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக ஆனந்த்பாத் அறக்கட்டளையைத் திறந்தார்.  கடந்த 2011 ஆம் ஆண்டு, அண்ணா ஹசாரே நடத்திய ஊழலுக்கு எதிரான இயக்கத்தில் சேர்ந்தார். பின்னர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கிய ஆம் ஆத்மி கட்சியில் ராஜ்குமார் இணைந்தார்.

Tags :
#ArvindKejriwalAAPDelhiEDRaidEnforcementDirectorateRaajkumarAnand
Advertisement
Next Article