For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலி - வடமாநிலங்களில் விமான நிலையங்கள் மூடல்!

பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், வட இந்தியாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
10:31 AM May 07, 2025 IST | Web Editor
‘ஆபரேஷன் சிந்தூர்’ எதிரொலி   வடமாநிலங்களில் விமான நிலையங்கள் மூடல்
Advertisement

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கணடனம் தெரிவித்தனர். இதையடுத்து பாகிஸ்தானுடனான உறவை இந்தியா முற்றிலுமாக துண்டித்தது.

Advertisement

குறிப்பாக, வான்பரப்பு மூடல், சிந்துநதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதனால், இரு நாடுகளிடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான இந்த சூழலை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. அதேவேளை, பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்பட பலரும் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் நள்ளிரவு 1.44 மணிக்கு பாகிஸ்தான் மீதும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இந்தியா தாக்குதல் ராணுவம் நடத்தி உள்ளது. மொத்தம் 9 இடங்களில் (சகாம்ரு, முரித்கி, கோட்லி, சியால்கோட், குல்பூர், பிம்பர், பஹவல்பூர்) பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து நீதி நிலைநாட்டப்பட்டது என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில், வட இந்தியாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. தர்மசாலா, லே, ஜம்மு, ஸ்ரீநகர், அமிர்தசரஸ் உள்ளிட்ட வட இந்திய விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டுள்ளது. மேலும் விமான சேவைகள் பற்றிய விவரங்களை அறிந்து கொண்டு வருமாறு பயணிகளுக்கு ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ நிறுவனங்கள் அறிவுறுத்தி உள்ளது.

பயணிகள் தங்கள் பயண நேரத்தை திட்டமிடுவதற்கு முன்பு, விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு விமான சேவைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டும். தொடர் தாக்குதல் காரணமாக வட மாநிலங்களில் அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Tags :
Advertisement