For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

மீண்டும் வெடித்த போராட்டம்... வங்கதேச தலைமை நீதிபதி ராஜிநாமா!

02:59 PM Aug 10, 2024 IST | Web Editor
மீண்டும் வெடித்த போராட்டம்    வங்கதேச தலைமை நீதிபதி ராஜிநாமா
Advertisement

வங்கதேச உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவி விலக போராட்டக்காரர்கள் ஒரு மணி நேர கெடு விதித்த நிலையில், அவர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

Advertisement

வங்கதேசத்தில் விடுதலை போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலையில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் நாளடைவில் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இறந்தனர். நிலைமை மோசமானதை அடுத்து அந்நாட்டின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இதனையடுத்து அந்நாட்டு நாடாளுமன்றத்தை அதிபர் முகமது ஷஹாபுதீன் கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, வங்கதேச இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் நேற்று முன்தினம் (ஆக. 8) இரவு பதவியேற்றார். அவருக்கு அதிபர் முகமது ஷஹாபுதீன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தில் கடந்த இரண்டு நாட்கள் அமைதி நிலவிய நிலையில் மாணவ அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கின.  வங்கதேச உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உள்பட அனைத்து நீதிபதிகளும் பதவி விலக வேண்டுமென மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் வங்கதேச உச்சநீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தலைமை நீதிபதி பதவி விலக ஒரு மணி நேரம் கெடு விதித்தனர். பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டம் முடிவடைந்த நிலையில், நீதிபதிகளுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது வங்கதேசத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், வங்கதேசத்தின் தலைமை நீதிபதி ஓ பைதுல் அசன் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். வங்காளதேச முன்னணி செய்தி நிறுவனங்கள் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

Tags :
Advertisement