சீனா, லடாக்கில் அடுத்தடுத்து நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவு!
சீனாவின் ஜின்ஜியாங் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலை 1.26 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்தியாவின் லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரில் இருந்து வடக்கு வடகிழக்கே 166 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், லடாக்கின் லே பகுதியில் மித அளவிலான நிலநடுக்கம் இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆக பதிவாகி உள்ளது. இது 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் குறித்து விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை என கூறப்படுகிறது. லடாக் யூனியன் பிரதேசத்தின் கார்கில் நகரில் இருந்து வடக்கு வடகிழக்கே 244 கி.மீ. தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.