For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தைவானை தொடர்ந்து ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.3 ஆகப் பதிவு!

10:43 AM Apr 04, 2024 IST | Web Editor
தைவானை தொடர்ந்து ஜப்பானில் நிலநடுக்கம்   ரிக்டர் அளவில் 6 3 ஆகப் பதிவு
Advertisement

ஜப்பானிற்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில்,  இன்று அதிகாலை ஹொன்ஷுவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் நேற்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாகவும்,  சுமார் 35 கி.மீ. ஆழத்தில் பதிவானதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய அமைப்பு தெரிவித்தது.  இந்த நிலநடுக்கத்தினால் 9 பேர் உயிரிழந்தனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்க அதிர்வால்,  ஜப்பான் நாட்டின் கடலோரத்தில் அலைகள் உயரமாக எழும்பத் தொடங்கின.  இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பான் மற்றும் ஃபிலிப்பைன்ஸுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.  இந்நிலையில் இன்று ஜப்பான்,  ஹொன்ஷுவின் கிழக்கு கடற்கரையில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

32 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளது.  இதனால் உயிர்சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளிவரவில்லை.  மேலும் 40 கி.மீ ஆழத்தில் டோக்கியோவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement