For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு - ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு!

02:21 PM Nov 21, 2023 IST | Web Editor
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில அதிர்வு   ரிக்டர் அளவுகோலில் 4 1 ஆக பதிவு
Advertisement

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை 3 மணியளவில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 535 கிலோமீட்டர் தொலைவில் இன்று (நவ.21) அதிகாலை 3 மணியளவில் நில அதிர்வு ஏறப்பட்டது.  ரிக்டர் அளவுகோலில் 4.1 -ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வு, 73 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

ஆப்கான் நாட்டில் அடுத்தடுத்து நிலநடுக்கங்களால் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள அச்சத்தில் உள்ளனர். அந்நாட்டில் கடந்த அக்.7ம் தேதி ஹெராத் நகருக்கு வடமேற்கே 40 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவானதாக இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 5.5 ரிக்டர் அளவு கொண்ட பின்னதிர்வும் ஏற்பட்டது.

இதையும் படியுங்கள்: "ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வழங்கப்படும்” - காங்.தேர்தல் அறிக்கை வெளியீடு

இந்த நிலநடுக்கத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  மேலும் லட்சக்கணக்கான தங்கள் வீடுகளை இழந்து சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறும் நிலை ஏறபட்டது. அதனையடுத்து அக்டோபர் 13 மற்றும் 15ம் தேதிகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், தற்போது மீண்டும் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Tags :
Advertisement