For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#DuleepTrophy : 2வது முறை டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ் ஐயர்!

04:09 PM Sep 19, 2024 IST | Web Editor
 duleeptrophy   2வது முறை டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ் ஐயர்
Advertisement

துலிப் கோப்பை தொடரில் இந்தியா பி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 2வது முறையாக டக் அவுட் ஆனார்.

Advertisement

துலிப் கோப்பையில் மொத்தமுள்ள 6 ஆட்டங்களில் 5 ஆவது ஆட்டத்தில் இந்தியா டி மற்றும் இந்தியா பி அணிகள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஆனந்தபூர் மைதானத்தில் விளையாடி வருகின்றன.  டாஸ் வென்ற இந்தியா பி அணியின் கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் முதலில் பௌலிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி இந்தியா டி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் மற்றும் ஸ்ரீகர் பரத் இருவரும் நிதான ஆட்டத்தை கடைபிடித்தனர். தொடக்கத்தில் இருந்தே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தனர். சிறப்பாக விளையாடிய தேவ்தத் படிக்கல் 93 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஸ்ரீகர் பரத் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிஷாந்த் 19 ரன்களில் அவுட்டானார். ஸ்ரேயஸ் ஐயர் டக் அவுட் ஆனார்.

56 ஓவர்கள் முடிவில் இந்தியா டி அணி 4 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்துள்ளது. நிசாந்த் 1 ரன்னும், ரிக்கி புய் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ரிக்கி புய் 54 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 18 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்தியா டி அணி சார்பில் முகேஷ்குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

Tags :
Advertisement