சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது டிராகன் விண்கலம்!
அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் ஆக்ஸ்மின் -4 என்ற பெயரில் 4 பேர் கொண்ட குழு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல திட்டமிடப்பட்டது. இந்த ஆக்சியம் திட்டம் 6 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே, நேற்று பிற்பகல் 12.01 மணியளவில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் 'டிராகன்' விண்கலம் விண்ணில் பாய்ந்தது.
இந்த விண்கலத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்தனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) இந்த பயண திட்டம் மூலம் விண்வெளிக்கு சென்றுள்ளார். இந்த ராக்கெட் 8 நிமிடங்களில் முதல் கட்டமான புவிவட்ட சுற்றுப்பாதையை எட்டியது. முதல் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ராக்கெட் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது.
இந்த நிலையில், சுமார் 28 மணிநேர பயணத்துக்குப் பின்னர் 400 கி.மீ. தொலைவில் புவியின் சுற்றுவட்டப் பாதையில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துடன் டிராகன் விண்கலம் இன்று (ஜூன் 25) மாலை 4 மணியளவில் இணைந்தது. தொடர்ந்து அங்கு சுபான்ஷு சுக்லா குழுவினர் 14 நாட்கள் தங்கி ஆய்வுகளை மேற்கொள்வர் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.