Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

“நிவாரணப் பொருட்களில் விஜய்-ன் படங்களை ஒட்ட வேண்டாம்” - மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகோள்

01:53 PM Dec 12, 2023 IST | Jeni
Advertisement

வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் போது நடிகர் விஜய்-ன் புகைப்படங்களை ஒட்டக்கூடாது என மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு புஸ்ஸி ஆனந்த் வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Advertisement

சென்னை மேற்கு தாம்பரம் சமத்துவ பெரியார் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நடைபெற்றது. இதில் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பை, நோட்டு, புத்தகம் ஆகியவற்றை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டால் எங்களால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக தொடர்ந்து செய்வோம்.  நடிகர் விஜய்-ன் வேண்டுகோளுக்கு இணங்க தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து வருகிறோம்.

இதையும் படியுங்கள் : 'ஸ்டார்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது..!

வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்கும் போது விஜய்-ன் புகைப்படங்களை ஒட்டி வழங்கக் கூடாது என விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். மக்கள் இயக்க தொண்டர்கள் உதவி செய்வது, விஜய்-க்கு நிச்சயம் தெரியும். எனவே விஜய்-ன் புகைப்படங்களை ஒட்டி நிவாரணப் பொருட்கள் வழங்குவதை நிச்சயம் தவிர்க்க வலியுறுத்துகின்றோம்” என தெரிவித்தார்.

 

 

Tags :
BussyAnandCycloneMichaungReliefStickersTVMIvijayVijayMakkalIyakkam
Advertisement
Next Article