For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்” - பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்!

ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
12:15 PM Jun 25, 2025 IST | Web Editor
ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
“ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம்”   பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
Advertisement

இந்திய ரயில்வே துறை டிக்கெட் கட்டணத்தை உயர்த்தவிருப்பதாக நேற்று(ஜூன்.24) தகவல்கள் வெளியாகியன. அதன்படி குளிர் சாதன வசதி அல்லாத ரயில்கள், விரைவு ரயில்களில் டிக்கெட் கட்டணம் ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரிக்கவுள்ளதாகவும் அதே போல் குளிர் சாதன வசதி கொண்ட ரயில்களில் இரண்டு கிலோ மீட்டருக்கு இரண்டு பைசா அதிகரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.

Advertisement

மேலும்  500 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்லும் ரயில்களில் கட்டண உயர்வு இல்லை என்றும் அதற்கு மேல் செல்லும் ரயில்களில் பயணிகளின் கட்டணம் அரை பைசா அதிகரிவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்தன. அத்துடன் இந்த சிறிய அளவிலான கட்டண உயர்வு வருகிற ஜூலை 1 ஆம் தேதியில் அமலுக்கு வருமென்றும் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் ரயில் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என பிரதமர் மோடியை முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “ இந்திய இரயில்வே என்பது ஏழை - நடுத்தர மக்களின் பயணங்களுக்கானது மட்டுமல்ல; அது, அவர்களது அன்றாட வாழ்வில் ஓர் அங்கம்! இன்று காட்பாடி செல்ல இரயில் நிலையம் வந்தபோது, என்னை அன்போடு வரவேற்ற மக்களிடம் பேசினேன். வழக்கமான உற்சாகமும் மகிழ்ச்சியும் குறைந்திருந்தது. ஜூலை முதல் உயர்த்தப்படவுள்ள இரயில் கட்டணங்களும் - குறைந்து வரும் சாதாரண வகுப்புப் பெட்டிகளும் அவர்களது மகிழ்ச்சியைக் களவாடியுள்ளது.

பிரதமர் மோடி மற்றும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவிடம் மக்களின் சார்பாக நான் கேட்டுக்கொள்வது…AC பெட்டிகள் உயர்த்த வேண்டும் எனச் சாதாரண வகுப்புப் பெட்டிகளைக் குறைக்க வேண்டாம். ரயில் கட்டணங்களையும் உயர்த்த வேண்டாம். ஏற்கெனவே விலைவாசி உயர்வு முதல் சிலிண்டர் விலை உயர்வு வரை நம் நடுத்தரக் குடும்பங்கள் அல்லற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது கவலையை மேலும் அதிகரித்திட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்! இந்திய ரயில்வே வெறும் சேவை மட்டுமல்ல, அது ஒரு குடும்பம்” என்று கூறியுள்ளார்.

Tags :
Advertisement