For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

குடையை மறக்கலையே? பிற்பகல் 1 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் இன்று பிற்பகல் 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
10:42 AM Mar 11, 2025 IST | Web Editor
குடையை மறக்கலையே  பிற்பகல் 1 மணி வரை இங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு
Advertisement

பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று (மார்ச் 11) முதல் வரும 16ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisement

குறிப்பாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (மார்ச் 11) கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடப்பட்டது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, புதுக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று காலை கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடடில் இன்று (மார்ச் 11) பிற்பகல் 1 மணி வரை 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

திருவாரூர்
கன்னியாகுமரி
திருநெல்வேலி
ராமநாதபுரம்

லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

தென்காசி
தூத்துக்குடி
புதுக்கோட்டை
சிவகங்கை
தஞ்சாவூர்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை
கடலூர்
விழுப்புரம்
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
சென்னை
ராணிப்பேட்டை
புதுச்சேரி
காரைக்கால்

Tags :
Advertisement