Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

6 பந்துகளுக்கு 6சிக்ஸர்கள் அடித்தபோது தோனி என்ன சொன்னார் தெரியுமா? - மனம் திறந்த #YuvarajSingh

10:02 PM Sep 20, 2024 IST | Web Editor
Advertisement

6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த பின் தோனி தன்னிடம் என்ன கூறினார்? என யுவராஜ் சிங் மனம் திறந்து பேட்டியளித்துள்ளார்.

Advertisement

90sல் பிறந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு அது ஒரு அற்புதமான காலகட்டம். 6பந்துகளுக்கு 6சிக்ஸர்களை விளாசும் வீரர் யாராக இருக்க முடியும் என்கிற கனவைக் கூட யாரும் கண்டிருக்கமாட்டார்கள். ஆனால் அந்த அற்புதத்தை இளம் துடிப்பு மிக்க வீரரான யுவராஜ் சிங் நிகழ்த்திக் காட்டினார். அது ரசிகர்களுக்கு ஒரு இனிமையான அதிர்ச்சி என்றே சொல்லலாம்.

கடந்த 2007-ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின்போதுதான் அந்த சாதனை நிகழ்ந்தது. இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்டு பிராட் சிக்ஸர்களுக்கு பறக்க விட்டார். ஒரு பந்துகூட மிஸ் ஆகாதவண்ணம் ஒரு ஓவரில் தொடர்ந்து 6 பந்துகளையும் சிக்சர்களாக விளாசி யுவராஜ் சிங் அசத்தியிருந்தார்.

அவரது அந்த அதிரடியான சிக்சர்கள் இன்றளவும் பெருமளவில் ரசிகர்கள் மறக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் அந்த போட்டியின்போது தான் 6 பந்துகளில் 6 சிக்சர் அடித்த பின் தோனி தன்னிடம் என்ன கூறினார்? என ரசிகர்கள் ஆவலோடு பல தகவல்களை தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். தோனி மற்றும் யுவராஜ் இடையே ஒரு பனிப்போர் நிகழ்ந்து வரும் நிலையில் தற்போது இது குறித்து யுவராஜ் சிங் மனம் திறந்துள்ளார்.

இது குறித்து யுவராஜ் சிங் தெரிவித்ததாவது.. “ நான் ஆறாவது சிக்சரை அடித்ததும் தோனியின் என்னிடம் வந்து, 'நீங்கள் எப்பொழுதெல்லாம் எனக்கு பின்னால் பேட்டிங் செய்ய வருகிறீர்களோ அப்போதெல்லாம் உங்களுடைய ஸ்ட்ரைக் ரேட் இரண்டு மடங்காக இருக்கிறது. நன்றாக விளையாடுகிறீர்கள்' என்று கூறியதாக யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

Tags :
MS DhoniSix SixesYuvaraj Sing
Advertisement
Next Article