Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திமுக - விசிக தொகுதிப் பங்கீடு: நாளை 2ம் கட்ட பேச்சுவார்த்தை!

12:39 PM Mar 05, 2024 IST | Web Editor
Advertisement

திமுக-விசிகவுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நாளை (மார்ச் 6) நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  திமுக – மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உடனான தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் கடந்த மார்ச் 2-ம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, திமுக – விசிக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை அன்றே (மார்ச் 2) நடைபெற இருந்தது. ஆனால் அன்றைய தினம் திட்டமிட்டபடி, பேச்சுவார்த்தை நடைபெறவில்லை.

இந்நிலையில் திமுக-விசிகவிற்கு இடையேயான 2ம் கட்ட பேச்சு வார்த்தை நாளை (மார்ச் 6) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விசிக தொடர்ந்து 2 தனி தொகுதியும், 1 பொது தொகுதியும் கேட்டு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திமுக 2 தனி தொகுதிகளை மட்டுமே தர முன்வந்துள்ளதால் இழுபடி நீடிப்பதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே முதல் கட்ட பேச்சு வார்த்தை கடந்த ஜனவரி 12-ம் தேதி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Tags :
DMKElection2024MK StalinNews7Tamilnews7TamilUpdatesThirumavalanVCK
Advertisement
Next Article