Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்திற்கு திமுகவினர் எதிர்ப்பு - ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தல்…

02:09 PM Feb 04, 2024 IST | Web Editor
Advertisement

ஆரணி தொகுதியை திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தியும் காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்திற்கு மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தும் அப்பகுதி திமுக நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் கோரிக்கை வைத்தனர்.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள திமுக-வுடனான கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தல் குழு கடந்த ஒரு வாரங்களாகவே தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த  நிலையில் தற்போது வரை காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை நிறைவு பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து இன்று திமுக-வின் கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய மதிமுக நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி பங்கீடு குறித்து முதல் கட்ட ஆலோசனை அண்ணா அறிவாலயத்தில் இன்று தொடங்கியது.

இரண்டு மக்களவை தொகுதி சீட்டுகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு மற்றும் சொந்த சின்னத்தில் போட்டி உட்பட கோரிக்கை வைத்துள்ளதாகவும், திமுக உடனான பேச்சுவார்த்தை சுமூகமாக அமைந்ததாகவும் மதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இறுதிகட்ட ஆலோசனை என்பது முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வந்த பிறகு முடிவு செய்யப்படுவதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொகுதி பங்கீடு குறித்து வருகிற 12 தேதி பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது. அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தொகுதி பங்கீடு குறித்தும் 12 தேதி பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக வரும் 12ஆம் தேதி மாலை அண்ணா அறிவாலயத்தில் திமுக குழு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் திமுக ஒருங்கிணைப்புக் குழு சந்திப்பு நிறைவடைந்தது.  இதன்படி ஆரணி காங்கிரஸ் எம்.பி.விஷ்ணு பிரசாத்திற்கு திமுகவினர் மீண்டும் போட்டியிட எதிர்ப்பு தெரிவித்தனர்.  ஆரணி நாடாளுமன்ற தொகுதியை இந்த முறையும் காங்கிரஸூக்கு ஒதுக்க கூடாது எனவும் திமுக வேட்பாளரை முன்னிறுத்த நிர்வாகிகள் ஐவர் குழுவிடம் வலியுறுத்தியுள்ளனர்.  வாக்கு சேகரிக்கும்போது திமுக வேட்பாளருக்காவே வாக்கு சேகரிப்போம் என்ற நம்பிக்கையோடு இங்கிருந்து செல்கிறோம் என நிர்வாகிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags :
ALLIANCEAnna ArivalayamAraniCongressDMK
Advertisement
Next Article