முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. தேர்தல் நெருங்கியதை அடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. அதில் ஒரு பகுதியாக ஆளுங்கட்சியான திமுக முன்கூட்டியே தயாராகி வருகிறது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை (ஜூன் 28) திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள் : வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி – செல்வப்பெருந்தகை கண்டனம்
காணொலிக் காட்சி வாயிலாக கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள் தலைமையில் திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் - நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் - சார்பு அணிச் செயலாளர்கள் - தொகுதி பார்வையாளர்கள் கூட்டம்.
- கழக பொதுச்செயலாளர் திரு @katpadidmk அவர்கள் அறிவிப்பு#DMK4TN pic.twitter.com/zVagYD3ADf
— DMK (@arivalayam) June 27, 2025
இதுகுறித்து அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் 28-6-2025 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும். அதில், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதி பார்வையாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.