Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தீபாவளி பண்டிகை: மதுரையில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் காயம்!

04:48 PM Nov 13, 2023 IST | Student Reporter
Advertisement

தீபாவளி  கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்ட முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில்  26 பேர் காயமடைந்தனர்.

Advertisement

தீபாவளி பண்டிகையை  பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும்,  பட்டாசுகள் வெடித்தும்  நேற்று உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது மதுரை மாவட்டத்தில் பட்டாசு மூலமாக தீ விபத்து ஏற்பட்டது.  பைபாஸ் ரோடு காளவாசல்,  சூர்யா நகர்,  செல்லூர் உள்ளிட்ட 8 இடங்களில்  நடந்த தீ விபத்தில் குழந்தைகள், பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 பேர் காயமடைந்தனர்.   மேலும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் மற்றும் உடமைகள் எரிந்து நாசமானது.

இதையும் படியுங்கள்:  விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடித்தவர்கள் மீது வழக்கு பதிவு – சென்னை காவல்துறை அதிரடி!

தீ விபத்தில் காயமடைந்த 26 பேரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.  இவர்களில் 6 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.  மேலும் 20 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.   பெரிய அளவிலான தீக்காய பாதிப்பு இல்லை என மருத்துவமனை டீன் டாக்டர்.ரத்னவேல் தெரிவித்தார்.

Tags :
DiwalifireFire accidentfirecrackersGovernment HospitalGovernment Rajaji HospitalMadurainews7 tamilNews7 Tamil UpdatesRajaji Hospitaltreatment
Advertisement
Next Article