மகாகும்பமேளாவின் கடைசி நாளில் விமானப்படை திரிசூலம் வடிவில் சாகச நிகழ்ச்சி நடத்தியதா? - வைரல் படம் உண்மையா?
மகா கும்பமேளாவின் கடைசி நாளில் பிரயாக்ராஜில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
மகா கும்பமேளாவின் கடைசி நாளில், அதாவது பிப்ரவரி 26, 2025 அன்று பிரயாக்ராஜில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சியின் போது எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 45 நாட்கள் நடந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் வகையில் இந்த விமான கண்காட்சி நடத்தப்பட்டதாகவும் பதிவுகளில் தெரிவிக்கப்பட்டது.
அதன் பதிவுகளை ( இங்கே , இங்கே , மற்றும் இங்கே ) காணலாம். பயனர்கள் இந்த புகைப்படத்தை ( இங்கே , இங்கே , மற்றும் இங்கே ) பகிர்ந்து "... பிரயாக்ராஜில், மகாசிவராத்திரிக்கு முன்னதாக இந்திய விமானப்படை விமான கண்காட்சியை நடத்தியது. விமான கண்காட்சியின் சிறப்பம்சம் என்னவென்றால், 3 சுகோய் விமானங்கள் நடுவானில் சிவபெருமானின் திரிசூலத்தை உருவாக்கியது ". என எழுதப்பட்டிருந்தது. இன்னும் சிலர் இந்த புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு, அதை ஆண்டின் சிறந்த படம் என்று அழைக்கின்றனர் ( இங்கே , இங்கே , மற்றும் இங்கே ). சமூக வலைதளங்களில் வைரலாகும் பதிவினை இந்த கட்டுரையின் மூலம் உண்மைச் சரிபார்ப்போம்.
உண்மை சரிபார்ப்பு :
வைரல் கூற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்க்க, பிரயாக்ராஜில் உள்ள மகா கும்பமேளா தளத்தில் பிப்ரவரி 26, 2025 அன்று நடைபெற்ற விமானக் கண்காட்சியின் செய்தி அறிக்கைகளை ( இங்கே , இங்கே , மற்றும் இங்கே ) நாங்கள் ஆராய்ந்தோம். இருப்பினும், இந்த செய்தி அறிக்கைகளில் வைரலாகும் புகைப்படத்தில் உள்ளதைப் போன்ற காட்சிகளை நாங்கள் காணவில்லை .
இந்தப் புகைப்படத்தைப் பற்றி மேலும் அறிய, நாங்கள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டோம், அதில் இந்தப் புகைப்படம் மிக நீண்ட காலமாக இணையத்தில் இருப்பதைக் கண்டறிந்தோம், குறைந்தபட்சம் மார்ச் 2019 முதல் ( இங்கே , இங்கே , மற்றும் இங்கே ) ( காப்பக இணைப்பு ) இணையத்தில் காணப்படுகிறது. இதன் மூலம் இந்தப் புகைப்படம் பிப்ரவரி 26, 2025 அன்று பிரயாக்ராக்கில் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. <
சுருக்கமாக, இந்த வைரல் புகைப்படம் 2025 பிப்ரவரி 26 அன்று பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு விமான கண்காட்சியின் போது எடுக்கப்பட்டது அல்ல என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
Note : This story was originally published by ‘‘FACTLY’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.