சாம்பியன்ஸ் டிராஃபி போட்டிகளில் விளையாட ரோஹித் சர்மா பாகிஸ்தான் சென்றாரா? - வைரலான வீடியோ உண்மையா?
This News Fact Checked by ‘Vishvas News’
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விமானத்தில் இருந்து இறங்குவது போன்ற ஒரு காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது, சில பயனர்கள் அதை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றதாகவும் தவறான கூற்றுடன் வைரலாக்கப்பட்டது. விமான நிலையத்தில் ரோஹித் சர்மாவை வரவேற்றதாகவும் பதிவுகள் வைரலாகின.
ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9, 2025 வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்று வருகிறது. விஸ்வாஸ் நியூஸின் விசாரணையில், வைரலான கூற்று தவறானது என்பது தெரியவந்துள்ளது. இந்த காணொளி அக்டோபர் 3, 2024 அன்று மகாராஷ்டிராவின் ரஷினில் ஒரு விளையாட்டு வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ரோஹித் சர்மா கலந்து கொண்டதைக் காட்டுகிறது. இந்தியா அணி விளையாடும் அனைத்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளையும் துபாயில் நடைபெற உள்ளதாகவும் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானில் விளையாடப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
' கிசார் ஷம்மான் ' என்ற பேஸ்புக் பயனர் பிப்ரவரி 10, 2025 அன்று வைரலான காணொலியைப் ( காப்பக இணைப்பு ) பகிர்ந்து, "ரோஹித் சர்மா பாகிஸ்தானுக்கு வரவேற்கிறோம்" என்று எழுதியிருந்தார்.
உண்மை சரிபார்ப்பு :
வைரலான காணொலியின் நம்பகத்தன்மையை சரிபார்க்க, அதன் கீஃப்ரேம்களில் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலை மேற்கொண்டோம், அதில் இந்த வைரல் கிளிப் அக்டோபர் 2024 இல் பல சமூக ஊடக கணக்குகளில் பதிவேற்றப்பட்டிருப்பதைக் கண்டறிந்தோம்.
'rohitmanarmy.45' என்ற இன்ஸ்டாகிராம் பயனர் இந்த வீடியோவை அக்டோபர் 3, 2024 அன்று பதிவேற்றினார், அதில் "ராஷின் மகாராஷ்டிராவில் ரோஹித் சர்மாவுக்கு பிரமாண்டமான வரவேற்பு" என்ற தலைப்பு இருந்தது. இதேபோல், X பயனர் ருஷியும் அக்டோபர் 3, 2024 அன்று வைரலான காணொளியைப் பகிர்ந்து கொண்டார், மேலும் அது மகாராஷ்டிராவில் உள்ள ரஷின் நகரில் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய முக்கிய வார்த்தைகளைப் பயன்படுத்தி நாங்கள் தேடியபோது, அக்டோபர் 3, 2024 அன்று வெளியான பல செய்தி அறிக்கைகள் எங்களுக்குக் கிடைத்தன, அவை வீடியோவின் சூழலை உறுதிப்படுத்தின. நவபாரத் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மகாராஷ்டிராவின் ரஷினில் ஒரு விளையாட்டு வளாகத்தின் அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஐ.சி.சி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி பிப்ரவரி 19 முதல் மார்ச் 9, 2025 வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்கள் கருதி பிசிசிஐ பாகிஸ்தானில் விளையாட மறுத்துவிட்டது. இதன் விளைவாக, இந்தியா தனது அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடும் என அறிவித்திருந்தது.
இது தொடர்பாக டைனிக் ஜாக்ரன் பத்திரிகையின் விளையாட்டு பிரிவு ஆசிரியர் அபிஷேக் திரிபாதியிடம் பேசினோம். அவர் இது தொடர்பாக கூறுகையில் "ரோஹித் சர்மாவின் இந்த வீடியோ சமீபத்தியது அல்ல. இந்திய அணி பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் விளையாடாது. அவர்களின் அனைத்து போட்டிகளும் துபாயில் நடைபெறும்" என உறுதிப்படுத்தினார்.
முடிவு:
விஸ்வாஸ் நியூஸ் தனது விசாரணையில், வைரலான கூற்று தவறானது என்று கண்டறிந்துள்ளது. இந்த காணொளி அக்டோபர் 3, 2024 அன்று மகாராஷ்டிராவின் ரஷினில் ஒரு விளையாட்டு வளாகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் ரோஹித் சர்மா கலந்து கொண்டபோது எடுக்கப்பட்டது. இந்தியா அணி விளையாடும் அனைத்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளையும் துபாயில் நடைபெற உள்ளதாகவும் பாதுகாப்பு கருதி பாகிஸ்தானில் விளையாடப் போவதில்லை எனவும் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Note : This story was originally published by ‘Vishvas News’ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.