For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் அவரது ரசிகர் தொங்கினாரா? - வைரல் வீடியோ போலி என்பது நிரூபணம்!

10:39 AM May 30, 2024 IST | Web Editor
தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் அவரது ரசிகர் தொங்கினாரா    வைரல் வீடியோ போலி என்பது நிரூபணம்
Advertisement

This news fact checked by Factly

Advertisement

ஹெலிகாப்டரில் ஒருவர் தொங்கிக் கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.  தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது அதனைப்  பிடித்துக் அவரின் ரசிகர் தொங்கிக் கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.  இதன் உண்மைத் தன்மை குறித்து Factly ஆய்வுக்கு உட்படுத்தியது. இது குறித்து விரிவாக காணலாம்.

 பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் ஒருவர் தொங்கினாரா?

இந்தியா முழுவதும் 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் (102) கடந்த மாதம் 19-ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் (88) கடந்த மாதம் 26-ம் தேதியும், கடந்த 7-ம் தேதி 3ம் கட்ட தேர்தலும் (93), கடந்த 13-ம் தேதி 4ம் கட்ட தேர்தலும் (96), கடந்த 20-ம் தேதி 5ம் கட்ட வாக்குப்பதிவும் (49), கடந்த மே 25ம் தேதி 6ம் கட்ட வாக்குப்பதிவு (58) நடைபெற்றது.

இதையடுத்து, 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதியும் நடைபெற உள்ளது.  அதன்படி உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாபில் தலா 13 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகள், பீகாரில் 8 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்டில் 3 தொகுதிகள் மற்றும் யூனியன் பிரதேசமான சண்டிகரில் ஒரு தொகுதியிலும் என மக்களவைத் தேர்தலுக்கான கடைசி கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த நிலையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றபோது அவரின் ரசிகர் ஒருவர் ஹெலிகாப்டரில் தொங்கியபடி சென்றதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

உண்மைச் சரிபார்ப்பு :

தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரில் அவரது ரசிகர் ஒருவர் தொங்கியதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவின் கீஃப்ரேம்களை பயன்படுத்தி கூகுள் ரிவர்ஸ் இமேஜ் தேடலுக்கு Factly உட்படுத்தியது.  இந்தத் தேடலின் முடிவில்  2016 இல் இதே வீடியோ குறித்த தகவல்களும், செய்திகளும் இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டது.  இந்த செய்திகளின் மூலம் இந்த வைரல் வீடியோ படம்பிடிக்கப்பட்ட இடம் இந்தியா அல்ல மாறாக கென்யா என்பது உறுதியாகியுள்ளது.

வைரல் வீடியோ - கென்யாவில் இறுதி ஊர்வலத்தில் எடுக்கப்பட்டது

பத்திரிகை செய்திகள் மற்றும் அறிக்கைகளின்படி, கென்யாவின் புங்கோமாவில் ஜேக்கப் ஜுமா என்ற தொழிலதிபர் மரணித்தார். அவரது இறுதி நிகழ்வில் பலர் கலந்து கொண்டார். அப்போது அவரது உடலை ஏற்றிக் கொண்டு ஹெலிகாப்டர் புறப்படத் தயாரானது. துக்கம் தாளாமல் ஜேக்கப் ஜுமாவின் ஆதரவாளரும் ரசிகருமான ஒருவர் அவரது உடல் கொண்டு செல்லப்பட்ட ஹெலிகாப்டரை பிடித்து தொங்கியுள்ளார்.

இந்தச் செயலைச் செய்ததற்காக அவரது உயிருக்கும் ஹெலிகாப்டர் விமானியின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதற்காக ஹெலிகாப்டரில் தொங்கிய சலே வஞ்சாலா மீது  புங்கோமா நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முடிவு

ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டிருக்கும் நபரின் வைரல் வீடியோ பழையது மற்றும் அவை கென்யாவில் படமாக்கப்பட்டது.  அந்த வீடியோவுக்கு இந்திய பிரதமர்  நரேந்திர மோடிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Note : This story was originally published by Factly and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
Advertisement