For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

4-வது திரைப்படத்தை இயக்க தயாராகும் தனுஷ்! மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

03:54 PM Jul 20, 2024 IST | Web Editor
4 வது திரைப்படத்தை இயக்க தயாராகும் தனுஷ்  மகிழ்ச்சியில் ரசிகர்கள்
Advertisement

நடிகர் தனுஷ் புதிய திரைப்படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.

Advertisement

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் 'துள்ளுவதோ இளமை'  திரைப்படத்தில் 2002ம் ஆண்டு அறிமுகமானார். தற்போது தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பாலிவுட், ஹாலிவுட் என நடிப்பில் தனுஷ் கலக்கி வருகிறார். நடிப்பு மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குநராகவும் சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறார்.

தனது 50-வது திரைப்படத்தை தனுஷ் தானே இயக்கி நடித்துள்ளார். 'ராயன்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், நடிகை துஷாரா விஜயன், நடிகை அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். 'ராயன்' திரைப்படத்துக்குப் பிறகு தனுஷ் தெலுங்கில் 'குபேரன்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கடுத்து நடிகர் தனுஷ் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தினை இயக்கி வருகிறார்.

இதையும் படியுங்கள் : பாலஸ்தீன ஆதரவு மாடலை பயன்படுத்திய விவகாரம் – மன்னிப்புக் கோரிய அடிடாஸ்…

இந்நிலையில், புதிய படம் ஒன்றில் கதை எழுதியுள்ள தனுஷ், அதை நடிகர் தனுஷ் இயக்கி நடிக்க உள்ளதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். இதுவரை 3 திரைப்படங்களை இயக்கியுள்ள தனுஷ், தற்போது 4ஆவது திரைப்படம்  தயாராக இருப்பதால் தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Advertisement