For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
03:08 PM Jul 07, 2025 IST | Web Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாலை 4 மணி முதல் பக்தர்களுக்கு அனுமதி
Advertisement

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகும். இங்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் கடந்த மாதம் 27ம் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கடந்த 1ம் தேதி முதல் கோயில் உள்பிரகாரத்தில் மூலவர், பார்வதி அம்பாள், கரிய மாணிக்க விநாயகர், வள்ளி அம்பாள், தெய்வானை அம்பாள் ஆகிய தெய்வங்களுக்கு யாக பூஜைகள் நடைபெற்று வந்தன.

Advertisement

இந்த நிலையில் இன்று காலை 6 மணியளவில் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா குடமுழுக்கு வெகுவிமரிசையாக நடைபெற்றது. அதேபோல், 164 அடி உயர ராஜகோபுரத்தில் ஒன்பது கும்ப கலசங்கள், சண்முகர் ராஜகோபுரத்தில் உள்ள ஐந்து கலசங்கள், மூலவர், சண்முகர் மற்றும் வள்ளி தெய்வானை கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கும் குடமுழுக்கு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பக்தர்கள் மீது டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அப்போது பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.

இந்த விழாவில் உயர்நீதிமன்ற, மாவட்ட நீதிபதிகள், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சேகர்பாபு, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், கோவில் தக்கார் அருள்முருகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்செந்தூர் நகரமே பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கியது. குடமுழக்கு விழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் 6000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக குடமுழுக்கு விழாவை முன்னிட்டு நேற்று கோயிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலை 4 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement