For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

புகார் அளித்தும் காவல்துறை மெத்தனம் - நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை வெட்டிய மர்ம நபர்கள்.!

12:01 AM Jan 25, 2024 IST | Web Editor
புகார் அளித்தும் காவல்துறை மெத்தனம்   நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை வெட்டிய மர்ம நபர்கள்
Advertisement

புகார் அளித்தும் காவல்துறை மெத்தனத்தோடு நடந்து கொண்டதால் மர்ம நபர்கள் நோட்டமிட்டு வந்து நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினர்.

Advertisement

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் நமது  நியூஸ் 7 தமிழ் செய்திக் தொலைக்காட்சியின் செய்தியாளராக கடந்த  ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.

இவரை இன்று செய்தி சேகரித்து விட்டு வீடு திரும்பியுள்ளார். வழக்கம் போல  இரவில் வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் அவரை நோட்டமிட்டதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி விட்டு தப்பியோடியுள்ளது.

Imageஇதனைத் தொடர்ந்து வெட்டுக் காயங்களுடன்  உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த செய்தியாளர் நேசப் பிரபுவை தகவலறிந்த  காமநாயக்கன்பாளையம் போலீசார் அவரை மீட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த  மர்ம நபர்களை போலீசார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

மர்ம நபர்கள் தன்னை நோட்டமிட்டு வருவதாக தாக்குதலுக்கு 4 மணி நேரத்திற்கு முன்பே நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், மர்ம நபர்களால் தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement